Friday, September 26, 2014

நினைவுகள்

நண்பர் திரு. ரவி அவர்கள் எழுதிய  The Fleeting Time என்ற ஆங்கிலக் கவிதையின் பாதிப்பு , எனது இந்த வரிகள் !


தண்மையதன் அணைப்பினிலே’
தனித்திருந்த காலையிலே 
தண்ணிலவை வானமதும்
தவிர்த்திருந்த நாளினிலே 
தாரகைகள் வெண்பனியாய்
ஒளிர்ந்திருந்த வேளையிலே
தவமிருந்தேன் தனைமறந்தே
தலைவியுனை நினைத்திருந்தேன் !

நெஞ்சமெனும் கடற்கரையின்
நேரியதோர் பாதையிலே 
நேற்றைப் பொழுதுகளின்
நினைவுக் காற்றடிக்கும்!
உவகைதந்த உன்முகத்தின்
தோற்றங்கள் தேடிவரும்!
நினைவுகளே தொடர்ந்துவரும்
நிம்மதியோ விடைகள் பெறும் !

காலத்தின் ஓட்டமதில்
கரைந்திடாத உன்காதல் !
களங்கமற்ற கண்பேசும்
காவியமாம் உன்காதல்!
ஏழிசையாய் எனில் நுழைந்த
தேவதையாமுன் காதல்!
என்றென்றும் என்மனதில்
நிலைத்திருக்கும் நினைவாக !

வேதனையின் வேளையிலே 
வேறேதும் நினைவின்றி
வேரறுந்த கொடிபோலே 
வீழ்ந்தே நொந்திருந்தேன்!
நொந்திருந்த காலமெலாம்
நொடியினிலே தான்மறைய
வந்ததுபார் விடிவெள்ளி
வாடையிலோர் வேனலிழை !

வாடையிலோர் வேனலிழை !
வாழ்வினிலே கானமழை !
**********

The Original in Engilsh follows: 

The Fleeting Time!




No comments:

Post a Comment