Thursday, September 18, 2014

இதயத்தின் இசை !

இதயத் திருத்தலத்தில் என்றும்உறைந்திருக்கும் இணையற்ற இசைத் தெய்வமே ! உன் அருள் வெள்ளம் என்றென்றும் என்னுள்ளில் ஓயாமல் ஓடியே பெருகிடட்டும் ! வாய்கொண்டு பாடுமந்த வரம் இல்லையென் றாலும் வார்த்தைகள் வந்தி டட்டும்! - மனம் வகையாக வாழ்ந்தி டட்டும் ! தேனூறும் பாடல்கள் தெய்வத்தின் அருளாகத் தோன்றியே வாழ்த்திடட்டும்! - மனம் தினந்தோறும் வணங்கிடட்டும் ! ஓமென்று உனையெண்ண ஒரு நூறு பாடல்கள் உடனோடி வந்தி டட்டும் - உளம் பாகாய் உருகிடட்டும் ! தானென்ற எண்ணங்கள் எனைவிட்டுத் தனியே தன் வழிநோக்கி யேகிடட்டும் - தக்க வார்த்தைகள் அதை விரட்டும் ! ஏனென்ற கேள்விக்கு இலக்காகா வண்ணத்தில் எழுத்துக்கள் சூழ்ந்தி டட்டும்! - இசை என்னோடு வாழ்ந்தி டட்டும் ! என்னாளும் 'இசை' என்ற சுருதிஎன்றும் மாறாமல் என்னோடு சேர்ந்தி டட்டும்! - இதை எல்லோரும் தேர்ந்தி டட்டும் ! --பாலாஜி 02.08.1981

2 comments:

  1. நல்லா இருக்கு.... தொடர்ந்து எழுதுங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete