Thursday, September 18, 2014
இதயத்தின் இசை !
இதயத் திருத்தலத்தில்
என்றும்உறைந்திருக்கும்
இணையற்ற இசைத் தெய்வமே !
உன்
அருள் வெள்ளம் என்றென்றும்
என்னுள்ளில் ஓயாமல்
ஓடியே பெருகிடட்டும் !
வாய்கொண்டு பாடுமந்த
வரம் இல்லையென் றாலும்
வார்த்தைகள் வந்தி டட்டும்! - மனம்
வகையாக வாழ்ந்தி டட்டும் !
தேனூறும் பாடல்கள்
தெய்வத்தின் அருளாகத்
தோன்றியே வாழ்த்திடட்டும்! - மனம்
தினந்தோறும் வணங்கிடட்டும் !
ஓமென்று உனையெண்ண
ஒரு நூறு பாடல்கள்
உடனோடி வந்தி டட்டும் - உளம்
பாகாய் உருகிடட்டும் !
தானென்ற எண்ணங்கள்
எனைவிட்டுத் தனியே தன்
வழிநோக்கி யேகிடட்டும் - தக்க
வார்த்தைகள் அதை விரட்டும் !
ஏனென்ற கேள்விக்கு
இலக்காகா வண்ணத்தில்
எழுத்துக்கள் சூழ்ந்தி டட்டும்! - இசை
என்னோடு வாழ்ந்தி டட்டும் !
என்னாளும் 'இசை' என்ற
சுருதிஎன்றும் மாறாமல்
என்னோடு சேர்ந்தி டட்டும்! - இதை
எல்லோரும் தேர்ந்தி டட்டும் !
--பாலாஜி
02.08.1981
Subscribe to:
Post Comments (Atom)


நல்லா இருக்கு.... தொடர்ந்து எழுதுங்க... வாழ்த்துக்கள்...
ReplyDeleteThank you
Delete