"யாரும் அனாதைகளாகப் பிறப்பதில்லை ;
அவர்கள் 'அனாதைகள்' ஆக்கப்படுகிறார்கள் !"
சில நாட்களுக்கு முன்பு, நண்பர் சஜயன் அவர்கள் மலையாளத்தில் எழுதிய 'ஒரு அநாதை' என்ற அற்புதமான மனதை உருக்கும்/அறுக்கும் வரிகளைப் படித்து , அதன் விளைவாக நான் தமிழில் எழுதிய வரிகள் கீழே :
(Some time back I read the lines of my friend Sajayan Elenad. It was a poem titled 'An Orphan'. The factual, emotional lines touched my heart and I translated the lines in Tamil, which is given below, followed by the Original one in Malayalam.)
நீ ஒருத்தி மட்டும் தானே !
உனக்குத் தெரியாது
நான் யாரென்றோ,
யாராக வளர்வேன் என்றோ !
ஆனால்,
உனது கருப்பையில்
சுருண்டு கிடந்த போதே
நானறிவேன் அல்லவா
நீதான் என் தாய் என்று !
உனது வேண்டுதல்கள்,
உனது முணுமுணுத்தல்கள்,
இவை அனைத்தும்
உறங்காமல்
கண்களை மூடிக்கொண்டு
கிடந்த என்னை
எத்தனை வருத்தின என்று
நீ அறிய மாட்டாய் !
ஏமாற்றியது
நானில்லையே தாயே !
உன்னை நீயே அன்றோ
ஏமாற்றிக் கொண்டாய் !
கழிவிடங்களின் பாதைகளிலோ,
கடவுளர்களின் திருவிடங்களிலோ,
நடை பாதையிலோ,
என்னை விட்டு மறந்து,
ஒரு பத்து ரூபாய் காசுக்குப்,
'பெற்ற மகனை விற்ற அன்னை'
என்று பெயரெடுத்த உன்மேல்,
எனக்கு என்றும் வெறுப்பில்லை !
உனக்கு இனிமேல்
வேறுகுழந்தைகள்
பிறக்கலாம் !
ஆனால்
எனக்குத் தாயாய்...
நீ ஒருத்தி தானே
அம்மா !
நீ ஒருத்தி மட்டும் தானே !
(K.Balaji August 21 2014)
-------------------------------------------------------------------------------------------------------------------
மூலப் பதிப்பு மலையாளத்தில் :
അനാഥന് ;-
നിനക്കറിയില്ല , ഞാനാരെന്നോ ആരാകുമെന്നോ ,
എനിയ്ക്ക് പക്ഷെ , നിന്റെ ഗര് ഭപാത്രത്തില്
ചുരുണ്ടുങ്ങുമ്പോഴും , അറിയാമായിരുന്നു ,
എന്റെ അമ്മയെന്ന് ..;
ദൈവത്തോടുള്ള നിന്റെ പ്രാര് ഥനകള് ,
സ്വയം പിറുപിറുക്കലുകള് ,
ഉറങ്ങാതെ , കണ്ണുകളടച്ചു കിടന്നെന്നെ
കരയിപ്പിച്ചിരുന്നു ,
ചതിച്ചത് , ഞാനല്ലല്ലോ അമ്മേ ,
നീ നിന്നെ തന്നെ അല്ലെ ..?
ക്ലോസറ്റില് .
വഴിയരുകില് ,
ആരാധനാലയങ്ങളുടെ മുന്നില് ,
പ്ലാറ്റ് ഫോമുകളില് ,
പത്ത് രൂപ കാശിനു ,
നീ എന്നെ മറന്നിട്ടും ,
എനിയ്ക്ക് വെറുപ്പില്ല ...
നിനക്കിനിയും കുഞ്ഞുങ്ങളുണ്ടായേക്കാം ,
എനിയ്ക്കമ്മയായി നീ മാത്രമല്ലെ ഉള്ളൂ..!
By
Sajayan Elanad














